நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டு மாதங்களாக வேலை நிமித்தம் மீண்டும் சாலிகிராமத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். சாலிகிராமம் எனக்கு தாய்வீடு மாதிரி. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காலத்தில் குறைந்தபட்சம் நமது இருப்பாவது சினிமாக்காரர்களோடு இருக்க வேண்டுமென ஆசைப்பட்டு, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சாலிகிராமத்தில் வீடு எடுத்து தங்கினோம். அதுவும் காவேரி தெருவில் சரியாக ’காவேரி கார்னர்’ டீக்கடைக்கு அருகில். இரை தேடிப் பறக்கிற பல்வேறு பறவைகள் ஓய்வெடுக்க அமர்கிற ஒற்றைப் பெருமரம் போன்றதுதான் ’காவேரி கார்னர்’. […]
Author Archives: Dhina Cheithi
கோவிட் 19: அடுத்த இரு மாதங்கள் மிகக் கடினமானவை! – உலக சுகாதார நிறுவனம்
ஜெனீவா: கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார். தேவையற்ற மரணங்களை தவிர்க்கவும், அத்யாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், சரியான நடைமுறையை கையாள்வது அவசியம் எனவும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் […]
பொங்கலுக்கு மாஸ்டர் உள்பட 4 புதிய படங்கள்!
இந்த ஆண்டு முழுவதுமே கொரோனாவால் திரைத்துறை முடங்கிப் போனது என்றே சொல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்குக் கூட பெரிய பட்ஜெட் படங்களைத் திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்களும் தியேட்டர்காரர்களும் தயங்குகின்றனர். தியேட்டர்களில் சமூக இடைவெளி, பாதிப் பேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிய வசூலை எட்டுவது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தத் தயக்கம். சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் தியேட்டர்களை திறந்தபோது […]
வடிவேலுவையும் இழுக்கும் பாஜக!
சென்னை: நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சில ஆண்டுகள் வரை கொடிகட்டிப் பறந்தவர். ஆனால் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட கோபத்தில், திமுகவில் சேர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு தீவிர அரசியல் பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்தத் தேர்தலில் திமுக தோற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். வடிவேலு சினிமாவிலிருந்து முற்றாக ஒதுக்கப்பட்டார். சினிமாவில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்பில்லை. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது பா.ஜனதாவில் […]
நன்றி.. வணக்கம்… எல்லாம் முடிந்தது! – விஜய் சேதுபதி
சென்னை: 800 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி, ‘நன்றி வணக்கம்’ என்று மட்டும் கூறியுள்ளார். “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்தித்தார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய் சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய் சேதுபதி […]
ஊழல் திமுக… ஒரே மாற்று மருந்து ரஜினிதான்! – தமிழருவி மணியன்
அன்பிற்கினிய நண்பர்களுக்கு, வணக்கம். முன்னாள் அமைச்சர் திரு.பொன்முடியின் மகன் திரு.கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீடுகள் திரு. பொன்முடி கலைஞர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உயர் கல்வி […]
ஷிகர் தவான் சதம்… சென்னையை வீழ்த்தியது டெல்லி!
சார்ஜா: ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி. ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே சாம் கர்ரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி […]
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தடுத்துவிட முயல்கின்றனர்! – தமிழருவி மணியன்
அன்பிற்கினிய நண்பர்களுக்கு…. வணங்கி மகிழ்கிறேன். ஒருவரைப் பற்றி ஒரு செய்தி வெளியானால் அதைப் பற்றி அடுத்த கணமே அழுக்கு வார்த்தைகளால் அருவருப்பான நடையில் விமர்சனம் செய்து தங்கள் மன வக்கிரத்தை வெளிப்படுத்தும் ஒரு கூட்டம் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதற்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. எதையாவது ஒரு கருத்தை ஊடகங்களில் வெளிப்படுத்தும் போது விருப்பு வெறுப்பின்றி அக்கருத்து அமைவதுதான் நலன் பயக்கும். உடனே ஒரு செய்திக்கு எதிர்வினை […]
‘இலங்கைத் தமிழனாகப் பிறந்தது என் தவறா?’ – முத்தையா முரளிதரன் அறிக்கை
கொழும்பு: நான் இலங்கையில் பிறந்தது எனது தவறா என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வெளிஆனதிலிருந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இறுதிப் போரின்போதும், பின்னர் வந்த காலங்களிலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கும், இனப்படுகொலையாளன் ராஜபக்ச கூட்டத்துக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள், […]
‘தவிர்த்திருக்கலாம்… அனுபவமே பாடம்!’ – ரஜினிகாந்த்
சென்னை: ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி விவகாரத்தில் நீதிமன்றம் போனதைத் தவிர்த்திருக்கலாம்… அனுபவமே பாடம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.6.5 லட்சத்தையும் இன்று அவர் செலுத்தினார். ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரி நோட்டீசை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இவ்வழக்கு விசாரணையின்போது, ரஜினிகாந்த் தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததையடுத்து, ரஜினிகாந்த் தனது மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதற்கான மனு […]