தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு முடியும் முன்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகே புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இந்த நிலையில், இன்று காலை […]

அமெரிக்கா: மேலும் ஒரு கருப்பினத்தவர் சுட்டுக் கொலை!

பிலடெல்பியா: அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கழுத்தில் டெரெக் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு எழுந்த போராட்டங்களால் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸ் வன்முறை குறித்தும், கருப்பினத்தவர் மீது காட்டப்படும் பாகுபாடுகள் குறித்தும், இனவெறி […]

‘போய் பாடிட்டு வரட்டுமாடா தம்பி?’ – இலங்கை கச்சேரிக்குப் போகும் முன் என்னிடம் கேட்டார் எஸ்பிபி! – சீமான்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தம்பி விஜய் சேதுபதியின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எங்களது பேச்சில் அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் […]

சூர்யா 40: பாண்டிராஜ் இயக்குகிறார்!

சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. கொரோனா அச்சம் காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால், இந்த படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஆன்லைனில் வருகிற 30-ந்தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் விமானப் படையில் இருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ் தாமதமாக கிடைத்ததால் தள்ளி வைத்துள்ளனர். தீபாவளியையொட்டி ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து 39-வது படமாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து […]

‘சமூக ஊடகங்கள் ஏன் இப்படி பாழ்பட்டுக் கிடக்கின்றன?’ -தமிழருவி மணியன் வேதனை

திரு தொல். திருமாவளவனைத் தாக்கி ஒரு தரக்குறைவான விமர்சனத்தை வெளியிட்டு அதன்கீழ் என் படத்தையும் எந்த மனநோயாளி போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு மேல் அரசியல் களத்தில் இயங்கும் நான் எந்த நிலையிலும் எவ்வளவு தவறான மனிதரையும் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து ஒரு வார்த்தையைக் கூடப் பேசியதுமில்லை; எழுதியதுமில்லை. சமூக ஊடகங்கள் ஏன் இந்த அளவு பாழ்பட்டுக் கிடக்கின்றன என்று எனக்குப் புரியவில்லை. கழிப்பறை எழுத்துகள் விமர்சனம் என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்படுவதும் யாரும் யாரையும் […]

மீண்டும் வணக்கம் இந்தியா!

வணக்கம்…! வலையுலகில், தமிழில் ஒரு முழுமையான செய்தித் தளம், விருப்பு ,வெறுப்புக்கு அப்பால் நின்று நடுநிலையோடு செய்திகளை வெளியிடுவதே அரிதினும் அரிதாகிவிட்ட சூழலில், மீண்டும் ‘வணக்கம் இந்தியா’வைத் தொடரும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் பல செய்தித் தளங்கள் முடங்கிப் போயுள்ளன. பல அச்சு இதழ்கள் வலையுலகுக்கு இடம் பெயர்ந்துள்ளன. ஆனால் செய்திகளின் தரம், நிறம் மட்டும் மாறவே இல்லை. செய்திகள் இப்போது அவரவர் கருத்துகளாக இடம்பெறும் நிலைதான் பரவலாகக் காணப்படுகிறது. ‘வணக்கம் இந்தியா’ இந்த […]

திடீர் சந்திப்பு… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முக ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசனே முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. ரஜினி தரப்பில் இருந்து இன்னும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்து […]

பெரியார், அம்பேத்கர் பேசியதைத்தானே திருமாவளவனும் பேசினார்? – முக ஸ்டாலின்

சென்னை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து, சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”, என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, எடப்பாடி அ.தி.மு.க. அரசின் சைபர் கிரைம் போலீசார், […]

‘அண்ணா பல்கலைக்கழகத்தைக் காத்திடுவோம்!’

பாஜக அரசின் முன்வைப்புகளில் ஒன்றான இந்த ‘உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்’ (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக் கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017 முதல் கூறிவந்தது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் ஜவடேகர் முதன் முதலில் இந்தக் கருத்தை முன்வைத்தார்., பல்கலைக் கழக நல்கைக் குழு (UGC) அதற்கான நெறிமுறைகளை அதே ஆண்டில் வெளியிட்டது. அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட […]

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்ய முயற்சி! – முக ஸ்டாலின்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “நீட் தேர்வைப் பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பெரும் குளறுபடி ஏற்படுகிறது. ஆளுநரை முதல்வர் பழனிசாமி கேள்வி கேட்காவிடில் […]