சீனாவில் புதிய வைரஸ் பரவல்? – மக்கள் தொகை அதிகமுள்ள நகரில் முழு ஊரடங்கு

பீஜிங்: சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஆண்டுக்கு ஒரு அலை என 3 அலைகளாக கொரோனா வைரஸ் பரவி விட்டது. அடுத்த அலை ஜூனில் தொடங்கும் என்று வேறு அறிவித்துள்ளனர். இந்த […]

உலக அளவில் 40 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு

ஜெனீவா: சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்னமும் மிரட்டி வருகிறது. கொரோனா, டெல்டா, ஒமைக்ரைன் என உருமாற்றம் அடைந்து பல அலைகளாகப் பரவி வரும் இந்த வைரஸால் உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழுமையாக […]

இந்தியாவில் கொரோனா 3வது அலை தாக்குமா? என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?

டெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், பெருந்தொற்றின் மூன்றாம் அலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவை இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோன தொற்று பரவலை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுனர்கள் குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐஐடி பேராசிரியர் மனிந்தர […]

மீண்டும் முதல்லருந்தா… இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

மும்பை: தென் ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 33-வயது நபருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்யாண் – டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 33-வயது நபர் தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் இருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பை வந்துள்ளார். இவர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை. அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 12 பேர் மற்றும் அடுத்த நிலை தொடர்பில் இருந்த 23 பேரும் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் […]

‘எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன!’ – கமல் ஹாஸன் நெகிழ்ச்சி

சென்னை: சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் லேசான கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறியால் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்ததால் லேசான பாதிப்பே இருந்தது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் விரைவில் குணமடைந்து நோயின் தீவிரத் தன்மையிலிருந்து மீண்டு வந்தார். ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி சில நாட்கள் கட்டாய ஓய்வில் இருந்து வந்தார். அவர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து […]

கொரோனா பாதித்த கமல் ஹாஸனை நலம் விசாரித்தார் ரஜினி!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் கடந்த 16-ந் தேதியன்று, மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமிக்க இந்திய கதர் ஆடைகளை பிரபலப்படுத்தும் வகையிலான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமல் ஹாசன் அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் வட அமெரிக்க குழு நிர்வாகிகளை சிகாகோவில், கமல் ஹாசன் சந்தித்து பேசினார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய கமல்ஹாசனுக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்தது. காய்ச்சலும் […]

இந்தியாவில் மேலும் 41383 பேருக்கு கொரோனா!

டெல்லி: கொரோனா 2வது அலையில் இதுவரை பார்த்திராத அளவுக்கு நாட்டில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 42 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

பிரேசில்: ஒரே நாளில் 85,149 பேருக்கு புதிதாக கொரோனா!

பிரேசிலியா: உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதைத் தொடர்ந்து 3வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது. கொரோனாவின் 2 அலைகளாலும் பிரேசில் மக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரேசிலில் இதுவரை பதிவு செய்யப்பட்ட […]

தமிழ் நாட்டில் மதுக்கடைகள் திறப்பு எப்போது?

சென்னை: கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ் நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மதுக்கடைகள் முற்றாக அடைக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டது, ஆனால் ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அங்கெல்லாம் மதுக்கடைகள் பகுதி நேரமாகத் திறக்கப்பட்டுவிட்டன. ஆந்திரா, கர்நாடகத்தில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மது விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் கடந்த […]