ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, […]
Category Archives: தலைப்புச் செய்தி
15 நாட்களில் 13 முறை உயர்த்தப்பட்ட பெட்ரோல் – டீசல் விலை!
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட கிட்டத்தட்ட 2 மடங்குக்கு மேல் எரிபொருட்களில் விலையை பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் உயர்த்திவிட்டது. ஒவ்வொரு முறை விலையை உயர்த்தும்போதெல்லாம் கூசாமல் பழியை முந்தைய காங்கிரஸ் அரசு மீது போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும். வடக்கில் 5 மாநில தேர்தல் நேரத்தில் கிட்டத்தட்ட 137 நாட்களாக பெட்ரோலியப் பொருட்களின் […]
பெரும் குழப்பத்தில் இலங்கை… பெரும்பான்மையை இழந்தது மகிந்த ராஜபக்சே அரசு!
கொழும்பு: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. விவசாய உற்பத்தி வீழ்ச்சி, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை, பண மதிப்பு வீழ்ச்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாத நிலை என பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருவதால் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர், அதிபர் வீடுகளை மக்கள் முற்றுகையிட்டு […]
‘புடின் போர்க்குற்றவாளியா? பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த அமெரிக்கா இப்படிச் சொல்வது மன்னிக்க முடியாதது!’
மாஸ்கோ: ரஷிய அதிபர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என பைடன் அழைப்பது மன்னிக்கக்கூடிய விஷயமல்ல என்று ரஷியா தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என பகிரங்கமாக அறிவித்தார். இதற்கு ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் […]
நெருங்கும் ரஷியப் படைகள்… உக்ரைன் தலைநகரில் இன்றுமுதல் பொதுமுடக்கம்!
கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் அறிவித்து இன்று 20-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், உக்ரைனின் பிடிவாதம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுத உதவி காரணமாக சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன. […]
மாறன் பட விமர்சனம்
நடிப்பு: தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த் சந்தோஷம் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: சத்யஜோதி தியாகராஜன் இயக்கம்: கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படம் வெளியானபோது, அதன் இளம் இயக்குநர் கார்த்திக் நரேனை ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளினார்கள். ஓரிரு ஆண்டுகள் கழித்து அதே கார்த்திக் நரேனின் மாஃபியா படம் வந்தபோது, சினிமா பற்றிய அவரது புரிதலை கேள்விக்குள்ளாக்கினார்கள். இப்போது மாறன் பார்த்தபிறகு, ‘தம்பி… போய் இன்னும் கொஞ்சம் சினிமா கத்துக்கிட்டு வாங்க’ […]
எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்
;நடிகர்கள்: சூரியா, ப்ரியங்கா மோகன், சத்யராஜ், வினய், சரண்யா, இளவரசு, சூரி, ராமர், திவ்யா ஒளிப்பதிவு: இசை: டி இமான் தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் எழுத்து – இயக்கம்: பாண்டிராஜ் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் அம்பலமாகி, குற்றவாளிகள் யார், அவர்களின் அரசியல் பின்னணி எல்லாம் தெரிந்தும் சட்டம் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இதுவும் கடந்துபோகும் என்ற காலாவதியான வசனத்தைச் சொல்லிக் கொண்டு அத்தனை பேருமே அமைதியாகக் கடந்து போகவே முயல்கிறார்கள். ஆனால் சூர்யாவும் பாண்டிராஜும் இந்த கொடுங் […]
வலிமை திரைப்பட விமர்சனம்
நடிகர்கள்: அஜித் குமார், ஹ்யூமா குரேஷி. கார்த்திகேயா ஒளிப்பதிவு: நீரவ் ஷா இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: போனி கபூர் – ஜீ டிவி எழுத்து, இயக்கம் – ஹெச் வினோத் அஜித் குமார் நடித்த படங்களிலேயே அதிக எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய படம் வலிமையாகத்தான் இருக்கும். திரையரங்குகள் பக்கம் வரவே ரசிகர்கள் தயக்கம் காட்டி வந்த சூழலில், அண்ணாத்த படம் அவற்றுக்கு ஆக்சிஜன் தந்தது. இப்போது வலிமை இன்னும் ஊக்கம் தந்திருக்கிறது. படத்தின் கதை புதிதா… […]
ஆபத்தான ஆரம்பம்!
தமிழ் நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், பணம் , உள்ளூர் செல்வாக்கு போன்றவற்றையும் தாண்டி, தமிழக மக்களின் மன ஓட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க முடிகிறது. சின்னச் சின்ன அதிருப்திகள் இருந்தாலும் -குருமூர்திகளின் அளவீடுகளின்படி – ஆண்மையுள்ள இந்த அரசே தொடரட்டும் என்ற விருப்பம்தான், திமுகவை வரலாறு காணாத வெற்றிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. முதல்வர் சொன்னதுபோல, பொறுப்பு ஏராளமாகக் கூடியிருக்கிறது. அத்துடன் நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு கவலையும்… அது, கோட்சேவின் வழித்தோன்றல்களான கொலைகாரக் கூட்டம் பாஜகவுக்கு ஆங்காங்கே […]
அண்ணன் அழைத்தார்… மகிழ்ச்சியான சந்திப்பு! – 13 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவைச் சந்தித்த கங்கை அமரன்
3இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. அவரின் சகோதரர் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன். கங்கை அமரனை பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக திரையில் அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப் பூவே.. தான் கங்கை அமரன் எழுதிய முதல் பாடல். அந்தப் பாடல் தொடங்கி, ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை தன் அண்ணன் இசையில் எழுதியுள்ளார் கங்கை அமரன். இவற்றில் பெரும்பாலானவை மெகா ஹிட் பாடல்கள். இளையராஜா தயாரித்த கோழி கூவுது படத்தில் இயக்குநராக அறிமுகமான […]