தேனி: தேனி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலை பகுதியில் நடந்தது. விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “நாட்டுக்கு உழைக்கவும் நல்ல விஷயங்களைச் செய்யவுமே நமக்கு நேரம் போதவில்லை. தேவையற்றவற்றைப் பேச நமக்கு நேரமில்லை. நம்முடைய தலைவர் கலைஞரிடம் ஒரு பத்திரிகை நிருபர், ‘உங்கள் மகன் ஸ்டாலினைப் […]
Category Archives: தலைப்புச் செய்தி
‘அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்பட ஆளுநருக்கு அதிகாரமில்லை!’ – உச்ச நீதிமன்றம் சவுக்கடி
டெல்லி: அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் முடிவு எடுப்பது தொடர்பாகவும், ஆளுநரிடம் கோப்புகள் தேங்கி நிற்பது தொடர்பாகவும், பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்ற நீதிபகள் தெரிவித்துள்ளனர். “இந்த விவகாரத்தில் மிக விரைவாக ஆளுநர் முடிவை எடுக்க வேண்டும் என கடந்த முறை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அதன் மீதான பதில் […]
துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே இனி நியமிக்கும்! – சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். சட்டசபையில் மசோதா குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உயர் கல்வியில் மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது இது மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது. துணை வேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும், ஆளுநர் – மாநில அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும். துணை […]
கேஜிஎஃப் 2… இந்திய சினிமாவில் புதிய சாதனை!
ராக்கி பாய் என அழைக்கப்படும் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேஜிஎஃப் 2. இதன் முதல் பாகம் கேஜிஎஃப் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம், அதைவிட பல மடங்கு வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் நேரடி இந்திப் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது கேஜிஎஃப் 2. வார், தக்ஸ் ஆப் இந்துஸ்தான் போன்ற படங்களின் வசூலையெல்லாம் […]
ரஜினி மகள் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா?
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ […]
முதல் முறையாக ஐரோப்பாவில் 28 நாடுகளில் வெளியாகும் கேஜிஎஃப் 2!
ஐரோப்பா கண்டத்தில் 28க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2. யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் கேஜிஎஃப் 2, வெளயீட்டுக்கு முன்பே பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இதுவரை தமிழ், கன்னடப் படங்கள் வெளியாகாத நாடுகளில் கூட முதல் முறைாக கேஜிஎஃப் 2 […]
முடிவுக்கு வருகிறதா சசிகலா அரசியல்?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதனையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். சில தினங்களில் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்கக் காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு […]
‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ
சென்னை: இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணித்தே தீர வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டணம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, […]
‘ இதற்கு மேலும் ‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?’ – கவிஞர் வைரமுத்து
சென்னை: நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37-வது கூட்டத்தின் போது அதன் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா இந்தி மொழியை வளர்ப்பது குறித்து விளக்கினார். இது தொடர்பாக பேசிய அவர், “நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பிற மொழிகளை பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள் உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. பிற […]
‘ ஆங்கிலத்துக்கு பதில் இந்தி?… ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் செயல்’! – அமித் ஷாவுக்கு முக ஸ்டாலின் கண்டனம்
சென்னை: இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில், அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் இப்படி பதிவிட்டுள்ளார்: ‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று […]