பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனைக் காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இந்த தகவலை கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்துள்ளது. இதனிடையே சசிகலா விடுதலை நாளன்று, பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து கர்நாடக உளவுத்துறை பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. […]
Author Archives: Dhina Cheithi
அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கப் போறீங்களா… அப்படி இது உங்களுக்காகத்தான்!
எக்சிம் வங்கி ஆட்சேர்ப்பு 2020: ஏற்றுமதி சந்தையில் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவி செய்திடும் வகையில் எக்சிம் வங்கி செயல்பட்டு வருகிறது. எக்சிம் வங்கியில் உள்ள பல்வேறு துறைகளில் மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலியிடங்கள் – 60. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31. விபரங்களுக்கு www.eximbankindia.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதத்திற்கு ரூ. 40,000 ஊதியம் கிடைக்கும். ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு 2021: ராணுவத்தில் பல்வேறு பதவிக்களுக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான […]
வாடகை பாக்கி இல்லை, எந்தவித நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை! – லதா ரஜினிகாந்த்
சென்னை: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தைக் காலி செய்ய, அடுத்த ஆண்டு ஏப்ரல் 30- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என, லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ராகவேந்திரா கல்விச் சங்கத்தை எச்சரித்தது. இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் தரப்பில், தான் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வாடகை பாக்கி ரூ.1.99 கோடி செலுத்த வேண்டும் என்பதில் உண்மையில்லை. […]
24 மணி நேர கனமழை: புதுவை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதுச்சேரி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்று முன் தினம் பெய்யத்தொடங்கிய மழையானது நேற்று இரவு முதல் கனமழையாக பெய்யத் தொடங்கியது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தற்போதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. புதுவையின் மற்றொரு பகுதியான காரைக்காலிலும் கனமழை தொடர்கிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இன்றைய தினம் கல்லூரிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டபடி இன்று உரிய வழிகாட்டுதல்களுடன் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மழையிலும் […]
நிலவில் எடுத்த பாறைகளுடன் பூமிக்கு வந்தது சீன விண்கலம்!
பீஜிங்: நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 24-ந்தேதி சீனா ஒரு விண்கலம் அனுப்பியது. ‘சேஞ்ச்-5’ என்ற அந்த ஆளில்லா விண்கலம் இந்த மாதம் 1-ந்தேதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்துக் கொண்டு. கடந்த 3-ந்தேதி நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டது. இது நிலவை சுற்றிக் கொண்டிருந்த ராக்கெட் விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்த […]
தமிழகத்தில் தொடரும் மழை… சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டியது!
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிரவ் மற்றும் புரெவி புயல்களால் கடந்த நவம்பர் மாதத்தில் நல்ல மழைப் பொழிவு இருந்தது. புயல்கள் ஓய்ந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடர்கிறது, சென்னையில் அடையாறு, கிண்டி, தி.நகர். கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு தொடங்கிய […]
கொரோனா: ஜெர்மனியில் கடும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முழு முடக்கம்!
பெர்லின்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடிய வைரஸ் சீனாவுக்கு வெளியே முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளில்தான் பரவியது. அதிலும் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. எனினும் மே மாதத்துக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த […]
இப்போ இல்லைனா எப்பவும் இல்ல’…. கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி!
அந்த பதிவில், “எனது வாழ்விற்கு இனிய பிறந்தநாள், அன்புள்ள அப்பா” என்று எழுதியுள்ளார். அந்த கேக் “நவ் ஆர் நெவர்” அதாவது, ”இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை” எனும் எழுத்துவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. “ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்… இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல..” என்ற முழக்கத்துடன் அரசியலில் ரஜினி இறங்கியுள்ளதைக் குறிக்கும் வகையில் இந்த கேக்கை வடிவமைத்துள்ளனர்.
ரஜினி பிறந்த நாள்… பிரதமர், முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்,” என்று கூறியுள்ளார். Dear @rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life. — Narendra Modi (@narendramodi) December 12, 2020 முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்தில், “திரு ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடனும் […]
‘பேன்ட்டை அவுத்துருவாங்க’! – போட்டியாளர்களைத் தெறிக்கவிட்ட பிக்பாஸ்!
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 61-ம் நாளான நேற்று, ஒவ்வொரு போட்டியாளரையும் தனியறைக்கு அழைத்து, “நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இந்த 60 நாட்க ளில் சாதித்தது என்ன… பிக்பாஸ் வீட்டுக்கு உங்கள் பங்களிப்பு என்ன?” என்று ரசிகர்களுக்கு கூறுமாறு பிக்பாஸ் கேட்டார். அதற்கு ரமேஷ், ஷிவானி, கேபி, ஆஜீத், சோம், நிஷா, ரம்யா ஆகியோர் என்ன கூறுவது என்று தெரியாமல் திணறினர். அனிதா, “நான் அனைவருக்கும் […]