தமிழகத்தில் தொடரும் மழை… சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டியது!

1

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிரவ் மற்றும் புரெவி புயல்களால் கடந்த நவம்பர் மாதத்தில் நல்ல மழைப் பொழிவு இருந்தது.

புயல்கள் ஓய்ந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடர்கிறது, சென்னையில் அடையாறு, கிண்டி, தி.நகர். கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.

திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.