சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவற்றலிருந்து… * முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ, நாங்களோ தற்போது பேசவில்லை. முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது. அதுபற்றி இப்போது பேசி ஒரு நொடி கூட வீணடிக்க விரும்பவில்லை. * கட்சிக்கு தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அடிப்படை […]
Author Archives: Dhina Cheithi
30 மணி நேரமாக நகராத புரெவி புயல்… கனமழை நாளை வரை தொடரும்!
சென்னை: வங்க கடலில் நிலைகொண்டிருந்த ‘புரெவி’ புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் உள்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் ‘நிவர்’ புயலை முன்னிட்டு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் முழுமையாக வடிவதற்குள், ‘புரெவி’ புயல் காரணமாகவும் மிகக் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பரவலாக […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய திமுக!
சென்னை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விவசாயிகளின் உணர்வு கொந்தளிப்பான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்; விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், தலைநகரம் டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் […]
சினிமாவில் இருந்துக்கொண்டு காமராஜர் மீது இவ்வளவு பக்தியா? – ஜீவாவை பாராட்டிய தமிழருவி மணியன்
ஜீவா, திஷா பாண்டே நடிப்பில், இ இப்ராகிம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் படம் கொம்பு. பன்னீர் செல்வம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை மாலை சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரஜினி கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். அவர் பேசுகையில், “நான் கலந்து கொள்ளும் இரண்டாவது திரைப்பட நிகழ்வு இது. நிறைய விழாக்களுக்கு என்னை அழைத்தாலும் அவற்றில் நான் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிடுவது […]
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை!
ஹைதராபாத்: 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கு 1-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சியை பிடிப்பதற்காக பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரையிலான தலைவர்களை பாஜக களம் இறக்கியது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு முதல்-மந்திரி கே.சந்திரசேகர்ராவும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு ஒவைசியும் பிரசாரம் செய்தார்கள். டி.ஆர்.எஸ். கட்சி 150 வார்டுகளிலும், பா.ஜ.க. 149 வார்டுகளிலும், காங்கிரஸ் 146 வார்டுகளிலும், தெலுங்குதேசம் கட்சி 106 வார்டுகளிலும், ஒவைசி கட்சி 51 வார்டுகளிலும் […]
ரஜினி புதிய கட்சி… அதிமுகவின் சைதை துரைசாமி பகிரங்க ஆதரவு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக நேற்று அறிவித்தார். இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த், “ஜனவரியில் கட்சி துவக்கம், வருகின்ற டிசம்பர் 31-ந்தேதி அறிவிப்பு” என்று சொல்லி இருக்கிறார். இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் இது. 1972-ல் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த மாற்றத்தைப்போல அமையக்கூடிய திருப்பத்தை, ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் […]
தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் மகிழ்ச்சிதான்! – ரஜினிகாந்த்
சென்னை: அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று பலரும் விவாதித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், நேற்று தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். 2021-ல் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் என்றும், அதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அதில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் அந்த பதிவில், “வரப் போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் […]
நாட்டையே அதிர வைக்கும் விவசாயிகள் போராட்டம்… திட்டமிட்டு மறைக்கிறதா மீடியா?
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 6-வது நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் கலைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. […]
மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணம்: இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினத்தை தடை செய்யக் கோரி இலங்கை போலீஸ் மனு தாக்கல் செய்ததை அடுத்து மன்னார் நீதிமன்றம் மாவீரர் தினத்தை நினைவுகூர்வதற்கு மன்னார் மாவட்டம் முழுவதும் தடை விதித்துள்ளது. மாவீரர் தின நினைவுகூரல்களை தடை செய்யக் கோரி மன்னார் காவல்துறை மனு தாக்கல் செய்ததையடுத்து, 2020 நவம்பர் 21 முதல் 27 ஆம் தேதி வரை மன்னாரில் மாவீரர் தின நினைவுகூரல் நிகழ்சிகளை தடை செய்து மன்னார் நீதிமன்றம் […]
ஆளுநருடன் முக ஸ்டாலின் சந்திப்பு: 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல்
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்தித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் உடன் சென்றனர். ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டதாக முக ஸ்டாலின் தெரிவித்தார். […]