மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகிறார் அண்ணாத்த!

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 40 சதவீதம் முடித்து விட்டனர். ஊரடங்கை தளர்த்தியதும் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்தனர். ரஜினிகாந்த்துக்கும் கொரோனா சோதனை நடந்தது. அதில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தாலும், அவருக்கு சீரற்ற ரத்த அழுத்தம் நிலவியதால், ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றார். பின்னர் சென்னை […]

கமலி From நடுக்காவேரி!

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் துரைசாமி: ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார். படத்தின் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி: நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரம். என்னுடைய வாழ்க்கையில் அனைத்துப் பக்கங்களிலும் […]

இளையராஜாவின் சொந்த ஸ்டுடியோ – படங்கள்

இசையமைக்க வந்து 45 ஆண்டுகளைக் கடந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முதல் முறையாக தனது சொந்த ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளார். கோடம்பாக்கத்தில் இருந்த எம்எம் பிரிவியூ தியேட்டரை விலைக்கு வாங்கி, புதுப்பித்து இளையராஜா ஸ்டுடியோ என்ற பெயரில் இன்று திறந்துள்ளார். அந்த புதிய ஸ்டுடியோவின் படங்கள்… [nggallery id=2]

காணாமல் போகும் ஸ்டுடியோக்கள் பட்டியலில் பிரசாத் ஸ்டுடியோவும் இணையட்டும்! – இளையராஜா

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, தனது பெயரில் இன்று புதிய ஸ்டுடியோவைத் திறந்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் திரையரங்கை விலைக்கு வாங்கி, அதைப் புதுப்பித்து இளையராஜா ஸ்டுடியோ எனப் பெயர் சூட்டியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பாடல் பதிவு இந்த ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. புதிய ஸ்டுடியோ திறப்பையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “ஒரு காலத்தில் சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிப் படங்கள் […]

சிம்பு – வெங்கட் பிரபுவின் மாநாடு டீசர்!

  மாநாடு  நடிகர்கள்: சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன் இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி எழுத்து இயக்கம்: வெங்கட் பிரபு  

மீண்டும் ராணுவத்தின் பிடியில் மியான்மர்… ஆங் சான் சூகி சிறையில்!

யாங்கூன்: மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்த சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்தது. இதனால், அந்நாட்டில் மீண்டும் ராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது. […]

தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி! – பின் வாங்கியது தமிழக அரசு

சென்னை: மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் வெளியாவதால் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஞகொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போன்று அரசு மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும், பள்ளிகள் மூடியிருக்கும் போது தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதிப்பது சரியல்ல என […]

தியேட்டரிகளில் மாஸ்டர், ஈஸ்வரன்…. தற்கொலைக்கு சமம்!

சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதற்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரையுலகை சேர்ந்த அரவிந்த்சாமி, கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரின் சோஷியல் மீடியா போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாக்டர் அரவிந்த் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: […]

தமிழகம் முழுவதும் விடியவிடிய மழை!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான எழும்பூர், சிந்தாதரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக […]

இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றவில்லை… கொள்கை பேசிக் கொள்ளை அடிக்கவில்லை! – தமிழருவி மணியன்

தமிழருவி மணியன் அரசியலில் ஈடுபட்டு இதுவரை என்ன செய்தார்? என்பது ஒரு வாசகரின் விவரமறியாத விடலைக் கேள்வி. கடந்த கால அரசியல் வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில்கூடப் பார்க்கத் தெரியாத கழுகார் ‘ இதே கேள்வி அவருக்கும் எழுந்ததாலோ என்னமோ போகிறேன்.. வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்’என்று எள்ளல் தன்மையோடு பதில் அளித்திருக்கிறார். ஐம்பதாண்டுகளுக்கு மேல் சில மேலான இலட்சியங்களுக்காக ஒரு முழு வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டவனின் வலி கழுகறிய வாய்ப்பில்லை. வானத்தில் வட்டமிட்டாலும் கழுகின் பார்வை மண்ணில் […]