பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்! – வெளியானது அறிவிப்பு

சென்னை: ‘அட்டகத்தி’, மூலம் அறிமுகமாகி ‘மெட்ராஸ்’ படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் பா ரஞ்சித். அடுத்த இரு படங்கள் கபாலி, காலாவில் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கி, நட்சத்திர இயக்குநரானார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த நிலையில், நடிகர் […]

சித்திரைச் செவ்வானம் – ஒரு பார்வை

ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம் ‘சித்திரை செவ்வானம்’. சண்டை காட்சிகளை இயக்கி கொண்டிருந்த சில்வா இந்த படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். படத்திற்கான கதையை இயக்குனர் விஜய் எழுதியிருக்கிறார். ஒரு சென்டிமெண்ட், ஆக்ஷன் படம். சமுத்திரகனி, ரீமா கல்லிங்கல் சாய்பல்லவியின் தங்கை பூஜா என நட்சத்திர வேல்யூ, மார்கெட் மதிப்பில் இருக்கிற விஜய்யின் கதை இரண்டரை மணி நேர புட்டேஜ். ஓடிடி தளத்தின் வியாபார கணக்கு சரியானது. ஆனால் படம் எவ்வளவு மோசமான ஒரு விஷயத்தை […]

வங்கக் கடலில் புதிய புயல் ஜவாத்..!!

சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் கன மழையால் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. அதற்குள், அடுத்தடுத்து மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் […]

இந்தப் படம் ஜெய்பீம் போல வரணும்! – நடிகர் ஆரி

 ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் ஆரி பேசும்போது, […]

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி… 16 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் யூட்டிகா (வயது 13). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கனமழையால் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் வீட்டிலிருந்த யூட்டிகா உள்ளிட்ட 3 பேர் மழைவெள்ளத்தை வேடிக்கை பார்க்க சாஸ்திரம்பாக்கம் மதகுக்கு சென்றனர். அங்கு தென்னேரி, குருவன்மேடு, வடக்குப்பட்டு ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி […]

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சித்திரைச் செவ்வானம்!

பலதரப்பட்ட திரைப்படங்களை வழங்கி குறுகிய காலத்தில் முக்கியமான ஓடிடி தளமாக வளர்ந்துள்ளது ஜீ 5. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம்’ இந்த தளத்தில் வெளியான ஒவ்வொரு படமும் ஒரு ரகம். தற்போது அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குநர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா முதல் முறை இயக்கியுள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ – பிரத்யேகமாக ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 3ல் வெளியாகிறது. […]

தல-ன்னு என்னை அழைக்காதீங்க! – அஜித் அவசர அறிக்கை

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது. அஜித் சார்பில் அவரது மேலாளரும் பிஆர்ஓவுமான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அந்த அறிக்கை: “இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ […]

பேச்சிலர்’ என் வழக்கமான படமல்ல! – ஜி வி பிரகாஷ்

ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு வழங்கும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசுகையில், “3 வருடத்துக்கு […]

83… உலகக் கோப்பை நாயகர்களின் உண்மைக் கதை!

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய அணிக்கு வரலாற்றில் முக்கியமான நாளாகும். உலக்கோப்பை போட்டிகளில் அரையிறுதி கூட நெருங்காத இந்தியா முதன்முறையாக அன்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்நிலையில் அதனை கண்முன்னே கொண்டு வரும் ஒரு […]

உஷார்…. அடுத்தடுத்து உருவாகும் இரு புயல்கள்!

. சென்னை: வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமுதல் மிக கனமழை பெய்தது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாவதற்கான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாவதாக எதிர்பார்க்கப்பட்டது. […]