பெரும் எதிர்பார்ப்புகிடையே நேற்று வெளியான மாமனிதன் ட்ரைலர் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
Author Archives: Dhina Cheithi
சவாலான வேடங்களுக்காகக் காத்திருக்கும் அவந்திகா மிஸ்ரா
அவந்திகாவின் பூர்வீகம் டெல்லி. பெங்களூருவில் தனது கல்வியை கற்ற இவர், நீலகண்டா இயக்கிய தெலுங்கு படமான மாயா மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார். பின்னர் இவர் தருண் ஷெட்டியுடன் இணைந்து மீகு மீரே மாகு மேமே எனும் திரைப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்தார். வியாஷகம், மீகு மாத்திரமே செப்தா மற்றும் பீஷ்மா உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த அவந்திகா, டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின்குமார் லட்சுமிகாந்தன் நடிக்கும் என்ன […]
இவ்ளோ வாய்க்கொழுப்பு ஆகாது தம்பி! – #என்னசொல்லப்போகிறாய்
தமிழ் சினிமாவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் நடிகர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார் ஒரு நடிகர். அதுவும் நாயகனாக நடித்த முதல் படம் வரும் முன்பே வாய்க் கொழுப்பு நடிகர் என்ற பெயரையும் சம்பாதித்துவிட்டார். அவர் பெயர் அஸ்வின் குமார். நடித்துள்ள படம் என்ன சொல்லப் போகிறாய். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அவர் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார். திரைத் துறையில் எப்பேற்பட்ட நடிகராக, கலைஞராக இருந்தாலும், இயக்குநர்களுக்கென்று ஒரு மரியாதை உள்ளது. இயக்குநரைதான் […]
மும்பை டெஸ்ட்: நியூஸிலாந்தை புரட்டி எடுத்த இந்திய அணி… மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்!
மும்பை: இந்தியா – நியூசிலாந்து இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் ட்ராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து […]
என்ன சொல்லப் போகிறாய் இசை வெளியீடு
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (06.12.21) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இதில் படத்தின் நாயகன் அஸ்வின் குமார் பேசியவதாவது: ”ரசிகர்களின் அன்பால்தான் இங்கு […]
‘அது ஓடாத படம்னு 5 கோடி சம்பளம் வாங்குறப்போ தெரியலியா?’ – நம்பர் ஒன் நடிகையை வெளுத்த கே ராஜன்
ஜி என் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிரான்மா’. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ். ஆர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் பேசும்போது, “இந்தப் படப்பிடிப்பு ஆரம்பித்த போது கொரோனா காலம் வந்துவிட்டது. படத்தை முப்பது நாளில் முடிக்கத் திட்டமிட்டோம். ஆனால் விரைவில் முடிக்க வேண்டும் என்ற […]
மீண்டும் முதல்லருந்தா… இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
மும்பை: தென் ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 33-வயது நபருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்யாண் – டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 33-வயது நபர் தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் இருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பை வந்துள்ளார். இவர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை. அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 12 பேர் மற்றும் அடுத்த நிலை தொடர்பில் இருந்த 23 பேரும் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் […]
‘எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன!’ – கமல் ஹாஸன் நெகிழ்ச்சி
சென்னை: சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் லேசான கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறியால் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்ததால் லேசான பாதிப்பே இருந்தது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் விரைவில் குணமடைந்து நோயின் தீவிரத் தன்மையிலிருந்து மீண்டு வந்தார். ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி சில நாட்கள் கட்டாய ஓய்வில் இருந்து வந்தார். அவர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து […]
ஜவாத் புயல் கரையைக் கடக்கும் பாதை இதுதான்!
டெல்லி: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியது. இந்தப் புயல் நாளை ஆந்திரா – ஒடிசா பகுதியை அடையும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நாளை காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியை நெருங்கும் ஜாவித் புயல், நாளை மறுநாள் ஒடிஷாவின் பூரி பகுதியை அடையும். பின்னர் வடகிழக்கு கடற்கரையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் […]
டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றம்!
சென்னை: தமிழகத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் கடைகள் இயங்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முன்பு போலவே […]