‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ

சென்னை: இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணித்தே தீர வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, […]

‘ இதற்கு மேலும் ‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?’ – கவிஞர் வைரமுத்து

சென்னை: நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின்  37-வது கூட்டத்தின் போது அதன் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா இந்தி மொழியை வளர்ப்பது குறித்து விளக்கினார். இது தொடர்பாக பேசிய அவர், “நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பிற மொழிகளை பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள் உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. பிற […]

‘ ஆங்கிலத்துக்கு பதில் இந்தி?… ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் செயல்’! – அமித் ஷாவுக்கு முக ஸ்டாலின் கண்டனம்

சென்னை: இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில், அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் இப்படி பதிவிட்டுள்ளார்: ‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று […]