2, 3 பணக்காரர்களுக்காக மட்டுமே நடக்கும் சர்வாதிகார ஆட்சி இது! – ராகுல் காந்தி

டெல்லி: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து காங்கிரசார் மனு கொடுக்கக் குவிந்தனர். இன்னொரு பக்கம் பிரதமர் மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்துக்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவானது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் […]

விக்ராந்த் ரோணா பட விமர்சனம்

கேஜிஎஃப் 2, சார்லி 777 என தன் சொந்த மொழியிலிருந்து சின்னப் பையன்கள் அனைத்திந்தியப் படம் கொடுத்த அசத்த, நான் மட்டும் சளைத்தவனா என விக்ராந்த் ரோணாவை விட்டிருக்கிறார் சுதீப். படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என படம் பார்ப்பவர்களே யூகித்துக் கொள்ள வேண்டும். கமரூட்டு என்ற மலைப் பகுதிக்கு வரும் காவல் அதிகாரி மர்மமான முறையில் கொல்லப்பட, அதை விசாரிக்க சுருட்டும் துப்பாக்கியுமாக திறந்த ஜீப்பில் வந்து சேர்கிறார் விக்ராந்த் ரோணா எனும் சுதீப். விசாரணையைத் […]

சர்வதேச விண்வெளி நிலையம்: வெளியேறுகிறது ரஷ்யா… திகைப்பில் அமெரிக்கா!

மாஸ்கோ: கடந்த 1998ல் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 11 நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தை துவக்கின. பூமியில் இருந்து, 400 கி.மீ., துாரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில், உறுப்பு நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்காஸ்மோசின் இயக்குநர் யூரி போரிசோவ், 2024க்குப் பின் சர்வதேச விண்வெளி திட்டத்தில் இருந்து ரஷ்யா வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளார். […]

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா… நேரில் சென்று ரசித்துப் பார்த்த ரஜினி!

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ‘ஃபோர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்’ என்ற 5 நட்சத்திர அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் […]

இன்று முதல் செஸ் ஒலிம்பியாட்… வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் […]

ஒரே மாதத்தில் 4 பள்ளி மாணவிகள் மரணம்… என்ன நடக்கிறது தமிழகத்தில்?

  சென்னை: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழகத்தில் ஜூலை மாதத்தில் நடந்த 4-வது தற்கொலை சம்பவமாக பதிவாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் கல்வியை வியாபாரமாக இல்லாமல் சேவையாக செய்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விருத்தாச்சலம் மாணவி கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு (ஜூலை […]

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு… அருவிகள் மூழ்கின!

ஒகேனக்கல்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக […]

ஒருவழியாக இலங்கை அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் கோத்தபய!

  கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை போன்றவற்றை மக்கள் கைப்பற்றினர். இதை முன்கூட்டியே அறிந்து, நாட்டைவிட்டே ஓடினார் ராஜபக்சே. மாலத்தீவில் அவர் இரு தினங்கள் தங்கினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தவே, சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று […]

நட்சத்திரங்கள் உருவாகும் இடம்… உலகம் பார்த்திராத பிரபஞ்சத்தின் படங்கள்… வெளியிட்டது நாசா!

வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘ஜேம்ஸ் வெப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஜேம்ஸ் […]

உச்சகட்ட பதட்டத்தில் இலங்கை… அதிபர் மாளிகை முற்றுகை… கோத்தபய தப்பி ஓட்டம்!

  கொழும்பு: சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் மீண்டும் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால், இலங்கையில் மீண்டும் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கடந்த சில […]