மும்பையில் தொடரும் கனமழை, வெள்ளம்… ‘வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!’

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை, புறநகர் மற்றும் தானே உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் அதிக கனமழை பெய்தது. இதன் காரணமாக மும்பை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அனைத்து தெருக்களும் வெள்ளத்தில் மிதக்கிறது. ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மும்பையில் ஜூன் மாதத்தில் பெய்ய […]

வட கொரியா… வெளிநாட்டுப் படம் – சீரியல் பார்த்தால் மரண தண்டனை!

பியாங்யாங்: அமெரிக்கா, தென் கொரியா போன்ற வெளிநாடுகளின் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் வேலையின் ஒரு பகுதியாக கடுமையான புதிய சட்டம் ஒன்றை வடகொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ, உடைகளை அணிந்தாலோ, அவற்றின் மொழி வழக்கைப் பயன்படுத்தினாலோ அதிகபட்சம் மரண தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளது கின் ஜோங் உன் அரசு. கிம் ஜோங் உன்னின் புதிய உத்தரவின்படி, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றை யாராவது அதிக அளவில் வைத்திருந்தால் […]

கொரோனா… ரசிகர்களுக்கு சூர்யா நிதியுதவி!

கொரோனா 2வது அலையால் தமிழக மக்கள் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமே முடங்கிப் போயுள்ளது. அரசு நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. திரைப்படத் துறை முற்றாக முடங்கி உள்ளதால் பெப்சி நிதி திரட்டி சினிமா தொழிலாளர்களுக்கு வழங்குகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா கொரோனாவால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர் மன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் 200 பேருக்கு தலா […]

தமிழ் நாட்டில் மதுக்கடைகள் திறப்பு எப்போது?

சென்னை: கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ் நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மதுக்கடைகள் முற்றாக அடைக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டது, ஆனால் ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அங்கெல்லாம் மதுக்கடைகள் பகுதி நேரமாகத் திறக்கப்பட்டுவிட்டன. ஆந்திரா, கர்நாடகத்தில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மது விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் கடந்த […]

ப்ளஸ் டூ தேர்வு ரத்து சரிதானா?

கொரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ, பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நடத்திய காணொளி ஆலோசனைக்கூட்டத்தில் மூன்று மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களுமே தேர்வு நடத்த வேண்டும் என்றே சொன்னார்கள். ஆனால், தற்போது தேர்வை ரத்துச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். திடீரெனத் தேர்வை ரத்துச் செய்வது என்பது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும் என்பது கல்வியாளர்கள் கருத்து. பிளஸ் டூ தேர்வு ரத்து தொடர்பாகப் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. சி.பி.எஸ்.இ என்றழைக்கப்படும் மத்திய […]

இளையராஜா பாடல்களில் நாம் மயங்கிக் கிடப்பது ஏன்?

இளையராஜா இசையமைத்த பாடல்களின் மிகச்சிறந்த தன்மைகள் எவை ? நாம் அவருடைய பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? 1. ஒரு பாடலின் முதற்சொல் தொடங்குவதற்கு முன்பாக முதல் இருபது நொடிகள் அல்லது முப்பது நொடிகளுக்கு ஒரு முன்னிசை அமைத்திருப்பார். அந்த முன்னிசையின் இன்பத் திகைப்பிலிருந்து தப்பித்து நாம் நடுநிலைக்கு வருவதற்குள் அந்தப் பாடலின் முதல் வரி தொடங்கும். வேறு வழியின்றி அந்தப் பாடலுக்குள் நாம் நம்மையறியாமல் மூழ்கத் தொடங்குவோம். ’அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ முதல் ’ராக்கம்மா கையத் […]

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…!’

சென்னை: சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) […]

தமிழகம்: கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு

  சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கபட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், மறுஉத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும். மே 2 ந்தேதி முழு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு, டிவி தொடர் […]

கொரோனா இன்னும் தீவிரமானாலும் தமிழகம் சமாளிக்கும்!

ரெண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுட்டு வர்றேன். முதல் டோஸ் போட்டது நியூ காலேஜ் எதிர்ல உள்ள அர்பன் ஹெல்த் சென்டர். அங்கதான் போனேன். ஸ்டாக் வரலீங்க; நீங்க மீர்சாகிப் பேட்டைல இருக்ற சென்டர்ல போட்டுக்கலாம்னு சொல்லி ரூட்லாம் சொன்னாங்க டாக்டரம்மா. நேரா செகண்ட் ஃப்ளோர் போங்க..னு வழியனுப்பி வச்சாங்க. மீர்சாகிப் ஹெல்த் சென்டர் இன்னும் பெருசா இருக்கு. ஓட்டு சாவடிக்கு வர மாதிரி ஜனங்க வந்துகிட்டே இருக்காங்க. நுழைஞ்சதுமே ஒரு நர்ஸ் தடுப்பூசிலாம் ரெண்டாவது மாடிக்கு போலாம்னு […]

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் தகனம்

சென்னை: நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. சட்டசபை […]