காபூல் விமான நிலையத்தில் 150 இந்தியர்களைச் சிறைப்பிடித்த தலிபான்கள்!

  காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் அந்த நாட்டை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். ஒவ்வொரு நகராக கைப்பற்றிய அவர்கள் இறுதியாக தலைநகர் காபூலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பரிதவித்தனர். தலிபான்கள் தாக்குதல்களை அதிகப்படுத்த தொடங்கியபோதே வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன. அங்கு இருக்கும் வெளிநாட்டினரை அழைத்து வர அந்தந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளை […]

மலேசிய புதிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்!

கோலாலம்பூர்: 18 மாதங்களுக்கு முன்பு மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமது கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திடீரென பதவி விலகினார். இதையடுத்து ஏற்பட்ட அரசியல் திருப்பங்களின் முடிவில் மகாதீர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்த மொஹிதின் யாசின், அன்றைய ஆளும் கூட்டணியின் பக்காத்தான் ஹராப்பானில் இருந்து தமது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். பின்னர் எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் ‘பெரிக்கத்தான் நேஷ்னல்’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றினார். பிரதமராகவும் பொறுப்பேற்றார். எனினும், ஆட்சி […]

இன்று ஓணம் பண்டிகை!

சென்னை: தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க திருவிழா ஓணம் பண்டிகை. உலகம் முழுவதும் வசிக்கும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்க திருமால் வாமன அவதாரமெடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி அனுமதி அளித்ததுடன் முதல் அடியில் பூமியையும், 2-ம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், 3-ம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க […]

நூறு நாள் சாதனையா? வேதனையா?

திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நூறு நாட்களைக் கடந்துள்ளது; இன்றும் சாதனைகளை விளக்கி நாளிதழ்களில் விளம்பரங்கள் தொடர்கின்றன. ஆளவந்தாருக்கு வேண்டியவர்கள் ஆதரவாகவும், எதிர்க்கட்சியினர் எதிராகவும் கருத்துகளை முன்வைத்துள்ளனர். நடுநிலையாக பார்த்தோம் எனில் ஆட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை என்பதையே நாம் மீண்டும், மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. சட்டமன்றத்தில் வெளிநடப்புகள் தொடங்கிவிட்டன; இப்போது வெளியில் அதிமுக. சட்டைக் கிழிப்பு காட்சிகள் அரங்கேறும் நாளை விரைவில் நாம் சந்திக்க நேருமோ? […]

எதற்கும் துணிந்தவன்…. இது சூர்யா!

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் சூர்யாவின் 40வது படமாகும். நாளை (ஜூலை 23) சூர்யா தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அதைச் சிறப்பிக்கும் வகையில் அவரது படத்தின் […]

ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்காக சாலைகளைச் சரிசெய்யச் சொன்ன மதுரை மாநகராட்சி அதிகாரி மாற்றம்!

மதுரை: ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத் ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். குறிப்பாக சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார். இதையடுத்து மதுரை மாநகராட்சியின் பணியமைப்புப் பிரிவின் உதவி ஆணையர் சண்முகம் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில், “மோகன் பகவத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு,அவர் கலந்துகொள்ளும் விழா நடக்கும் இடம் வரையிலான […]

டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டுமம் போராட்டத்தைத் தொடங்கினர் விவசாயிகள்!

டெல்லி: இந்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று ‘விவசாயிகள் நாடாளுமன்ற’ அமர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜந்தர் மந்தர் இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்தான் அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டம் நடந்து முடியும் வரை நாள்தோறும் இந்த போராட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Delhi: Punjab Congress MPs staged a protest in front […]

இந்தியாவில் மேலும் 41383 பேருக்கு கொரோனா!

டெல்லி: கொரோனா 2வது அலையில் இதுவரை பார்த்திராத அளவுக்கு நாட்டில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 42 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

தமிழ் நாடு காவல் துறைத் தலைவராகப் பதவி ஏற்றார் சைலேந்திர பாபு!

சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதையடுத்து தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை மெரினாவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து அவர் பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து இன்று ஓய்வுபெறும் டி.ஜி.பி. திரிபாதி, புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், […]

ஜூன் 20-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். […]