இன்று முதல் செஸ் ஒலிம்பியாட்… வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் […]

ஒரே மாதத்தில் 4 பள்ளி மாணவிகள் மரணம்… என்ன நடக்கிறது தமிழகத்தில்?

  சென்னை: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழகத்தில் ஜூலை மாதத்தில் நடந்த 4-வது தற்கொலை சம்பவமாக பதிவாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் கல்வியை வியாபாரமாக இல்லாமல் சேவையாக செய்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விருத்தாச்சலம் மாணவி கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு (ஜூலை […]

தொடங்கியது சந்திரமுகி 2 படப்பிடிப்பு… ராகவா லாரன்சுக்கு ஆசி வழங்கிய ரஜினி!

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை […]

44வது செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த்!

சென்னை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28 ம் தேதி முதல் ஆக.,10 ம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. போட்டியை முதல்வர் ஸ்டாலின், பிரதமர் துவக்கி வைக்க உள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நடிப்பில் உருவான டீசரை நடிகர் ரஜினிகாந்த் […]

அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவூ’ முன்னோட்டம் வெளியீடு

திமுக இளைஞர் அணி செயலாளர், எம்எல்ஏ, நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தேஜாவூ முன்னோட்டக் காட்சி: 

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை! #CHIYAAN61

  பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளன. சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஷபீர் உள்ளிட்டவர்களை கொண்டு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். அந்தப் படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ மூலம் சமீபத்தில் பா.ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான […]

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார். இன்றைய தினம், மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை […]

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு… அருவிகள் மூழ்கின!

ஒகேனக்கல்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக […]

ஒருவழியாக இலங்கை அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் கோத்தபய!

  கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை போன்றவற்றை மக்கள் கைப்பற்றினர். இதை முன்கூட்டியே அறிந்து, நாட்டைவிட்டே ஓடினார் ராஜபக்சே. மாலத்தீவில் அவர் இரு தினங்கள் தங்கினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தவே, சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று […]

நட்சத்திரங்கள் உருவாகும் இடம்… உலகம் பார்த்திராத பிரபஞ்சத்தின் படங்கள்… வெளியிட்டது நாசா!

வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘ஜேம்ஸ் வெப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஜேம்ஸ் […]