கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் அறிவித்து இன்று 20-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், உக்ரைனின் பிடிவாதம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுத உதவி காரணமாக சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன. […]
Category Archives: US-CANADA EDITION
அமெரிக்கா… ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு மேல் தொற்று… 2000ஐத் தாண்டியது மரணம்!
வாஷிங்டன்: 2020-ல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே, அதிக பாதிப்புக்குள்ளானது அமெரிக்காதான். அங்குதான் அதிவேகமாகப் பரவத் தொடங்கியது கோவிட் 19 எனும் கொரோனா. பின்னர் 2021-ல் டெல்டா வைரஸ் பரவியபோதும், பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது அமெரிக்காதான். இப்போது கொரோனாவின் மூன்றாவது திரிபான ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸின் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இந்த நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரு […]
மோடியைப் புகழ்ந்ததாக வந்த செய்தி போலியானது! – நியூயார்க் டைம்ஸ் விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல நாளிதழான ’தி நியூயார்க் டைம்ஸ்’ முகப்பு பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டதாக சமூகவலைதளத்தில் படங்கள், செய்திகள் பரவின. அதில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தனது முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு அதில், ‘உலகின் கடைசி மற்றும் நம்பிக்கை என்று குறிப்பிட்டு, உலகின் அதிக நபர்களால் விரும்பப்படும் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை வாழ்த்த இங்கு வந்துள்ளார்’ என தெரிவிப்பது போன்ற புகைபடங்கள் சமூகவலைதளத்தில் […]
காபூல் விமான நிலையத்தில் 150 இந்தியர்களைச் சிறைப்பிடித்த தலிபான்கள்!
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் அந்த நாட்டை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். ஒவ்வொரு நகராக கைப்பற்றிய அவர்கள் இறுதியாக தலைநகர் காபூலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பரிதவித்தனர். தலிபான்கள் தாக்குதல்களை அதிகப்படுத்த தொடங்கியபோதே வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன. அங்கு இருக்கும் வெளிநாட்டினரை அழைத்து வர அந்தந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளை […]
மலேசிய புதிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்!
கோலாலம்பூர்: 18 மாதங்களுக்கு முன்பு மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமது கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திடீரென பதவி விலகினார். இதையடுத்து ஏற்பட்ட அரசியல் திருப்பங்களின் முடிவில் மகாதீர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்த மொஹிதின் யாசின், அன்றைய ஆளும் கூட்டணியின் பக்காத்தான் ஹராப்பானில் இருந்து தமது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். பின்னர் எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் ‘பெரிக்கத்தான் நேஷ்னல்’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றினார். பிரதமராகவும் பொறுப்பேற்றார். எனினும், ஆட்சி […]
ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: அமீரகம் உள்ளிட்ட 5 நாடுகள் உறுப்பினராக தேர்வு
நியூயார்க்: ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு கவுன்சில் ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும். இது உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, பன்னாட்டு தடைகளை ஏற்படுத்துவது மற்றும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. அதேபோல நிரந்தமில்லாமல் 2 ஆண்டுகள் செயலாற்றக்கூடிய 5 உறுப்பினர் நாடுகளும் […]
கனடா… கொரோனாவுக்கு மேலும் 30 பேர் பலி
டொரன்டோ: கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 477பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23 ஆவது நாடாக உள்ளது கனடா. இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 98ஆயிரத்து 275பேர் இங்கு கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 25,873 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 19,255 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 795 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. […]
எச்1 பி விசா கட்டுப்பாடுகள் நீக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, எச் 1 பி மற்றும் எச் 4 ஆகிய விசாக்கள் வழங்கப் படுகின்றன. இந்திய தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள்தான், இந்த விசாவால் அதிகம் பயனடைந்தனர். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், எச் 1 பி விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்தார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து, எச் 1 பி விசா வழங்க, டிரம்ப் இடைக்கால […]
சீனாவில் மீண்டும் கொரோனா… 35 பேருக்கு புதிதாக தொற்று!
பீஜிங்: உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தது. மேலும் பிற நாட்டவர்கள் சீனாவுக்கு வருவதற்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 22 […]
பிரேசில்: ஒரே நாளில் 85,149 பேருக்கு புதிதாக கொரோனா!
பிரேசிலியா: உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதைத் தொடர்ந்து 3வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது. கொரோனாவின் 2 அலைகளாலும் பிரேசில் மக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரேசிலில் இதுவரை பதிவு செய்யப்பட்ட […]