சென்னை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து, சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”, என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, எடப்பாடி அ.தி.மு.க. அரசின் சைபர் கிரைம் போலீசார், […]
Category Archives: நம்ம ஸ்டேட்ல
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்ய முயற்சி! – முக ஸ்டாலின்
சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “நீட் தேர்வைப் பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பெரும் குளறுபடி ஏற்படுகிறது. ஆளுநரை முதல்வர் பழனிசாமி கேள்வி கேட்காவிடில் […]
வடிவேலுவையும் இழுக்கும் பாஜக!
சென்னை: நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சில ஆண்டுகள் வரை கொடிகட்டிப் பறந்தவர். ஆனால் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட கோபத்தில், திமுகவில் சேர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு தீவிர அரசியல் பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்தத் தேர்தலில் திமுக தோற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். வடிவேலு சினிமாவிலிருந்து முற்றாக ஒதுக்கப்பட்டார். சினிமாவில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்பில்லை. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது பா.ஜனதாவில் […]
‘தவிர்த்திருக்கலாம்… அனுபவமே பாடம்!’ – ரஜினிகாந்த்
சென்னை: ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி விவகாரத்தில் நீதிமன்றம் போனதைத் தவிர்த்திருக்கலாம்… அனுபவமே பாடம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.6.5 லட்சத்தையும் இன்று அவர் செலுத்தினார். ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரி நோட்டீசை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இவ்வழக்கு விசாரணையின்போது, ரஜினிகாந்த் தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததையடுத்து, ரஜினிகாந்த் தனது மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதற்கான மனு […]
‘இன்னும் என்னென்ன துரோகங்களைச் செய்யப் போகிறதோ அதிமுக அரசு!’ – முக ஸ்டாலின்
சென்னை: பதவிக்காக – ஊழலுக்காக, ‘நீட் தேர்வில்’ தமிழகக் கல்வி உரிமையைப் பறி கொடுத்தது போல், இப்போது மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது அதிமுக அரசு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க […]
நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது, விஜயகாந்த் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார் […]
‘மிகமிக கனமழை’ – இந்திய வானிலை மையம்
டெல்லி: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையைக் கடந்த நிலையில், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காகிநாடாவில் கரையைக் கடந்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் லோசான மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை […]
தமிழக முதல்வர் பழனிசாமி தாயார் காலமானார்
சிலுவம்பாளையம்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் (93), உடல்நலக் குறைவால் காலமானார். வயது மூப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தவுசாயி அம்மாள் உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும், தூத்துக்குடியில் கொரோனா ஆய்வுப் பணிகளில் இருந்த முதல்வர் பழனிசாமி உடனடியாக சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்று, தாயார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் […]
தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தப்பட்ட தலித் பெண் தலைவர் – தலைவிரித்தாடும் சாதிக் கொடுமை
கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்துள்ளபோது தலித் பெண் ஊராட்சி தலைவர் மட்டும் தரையில் அமர்ந்துள்ள படமும் வெளியாகியுள்ளது. ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான தம்மை, துணைத் தலைவர் தரையில் அமர வைத்து சாதிக் கொடுமைக்கு உள்ளாக்குவதாக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியத்தில் தெற்கு திட்டை […]