தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா!

  சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,56,917 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 532 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் […]

தமிழகம் முழுவதும் அடித்து ஊற்றும் பெருமழை!

சென்னை: தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன. மதுரை, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, ஏழுமலை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திருச்சி: லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, சமயபுரம்,மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நாமக்கல்: ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், ஆண்டகளூர்கேட், அத்தனூர் பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறை: சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, […]

சிலு சிலு காத்து… ஜில்லுன்னு மழை… குளுகுளு தமிழகம்!

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வட கிழக்குப் பருவமழை நேற்று இரவு தொடங்கியது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் விடிய, விடிய இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் […]