தெற்கு ஆஸ்திரேலியாவை முடக்கிய ஒரு பொய்!

அடிலெய்ட்: தெற்கு ஆஸ்திரேலியாவில், ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களிடமிருந்து புதிய கொரோனா தொற்று பரவுவதாகத் தகவல் வெளியான நிலையில், அந்தப் பரவலைத் தடுக்க ஆறு நாள்கள் கடுமையான ஊரடங்கை அறிவித்தது தெற்கு ஆஸ்திரேலியா அரசு. `ஒரு நாளைக்கு, ஒரு குடும்பத்தில், ஒருவர் மட்டுமே வெளியே வர வேண்டும். சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, பொது இடத்தில் உடற்பயிற்சி செய்வது, திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. வணிக நிறுவனங்கள், வணிக மையங்களெல்லாம் மூடப்பட்டன. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது. […]