Browsing Category

தலைப்புச் செய்தி

தலைப்புச் செய்தி

‘ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா?’ – முதல்வர் முக ஸ்டாலின்

சென்னை: உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில்…
Read More...

அந்தமான் அருகே மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி

டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், வங்கக்கடலில் வரும் 16ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே…
Read More...

‘அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லாத ஆளுநர் ஆர்என் ரவி’ – குடியரசுத் தலைவரிடம் திமுக சரமாரி புகார்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக சார்பில் குடியரசு தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் அடிக்கடி கருத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மனு…
Read More...

மாமன்னர் ராஜராஜன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! – மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்ட வரலாற்றிலேயே மிக உயர்ந்த இடத்தைபெற்ற மன்னன் ராஜராஜ சோழன். கடல் கடந்து சென்று பல நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய மாவீரன். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம்,…
Read More...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை… ஆரஞ்சு எச்சரிக்கை… பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: தமிழ் நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ் நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும்…
Read More...

காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சென்னை: கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியா முழுமைக்குமான திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால், ஒரு வாரம் கழித்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் இப்படத்தை வெளியிட்டனர்.…
Read More...

ரஜினி நடிக்கும் இரு புதிய படங்களைத் தயாரிக்கிறது லைகா நிறுவனம்!

சென்னை: இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிகேஎம் தமிழ்க் குமரன். சில நிமிட சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த தமிழ்க் குமரன், "தற்போது ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்துக்குப் பிறகு, லைகா நிறுவனத் தயாரிப்பில் இரண்டு…
Read More...

காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி!

டெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் இத்தேர்தலில்…
Read More...

ஜெயலலிதா மரணம்… சசிகலா உள்பட 4 பேர் குற்றவாளிகள்! – ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை

: மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி…
Read More...

கடலூரில் ‘ஜெயிலர்’ சூட்டிங்கில் ரஜினி: நேரில் பார்க்க அலைமோதும் ரசிகர்கள்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.…
Read More...