சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

திரையுலகிலிருந்து ரஜினிகாந்த் முதல் நபராக இளையராஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்,” என்று கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *