அப்படி அவர் எடுத்த புகைப்படங்களை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தது பார்த்தபடி என்ற கண்காட்சி ஒன்றையே சென்னையில் நடத்தினார்கள்.
இப்போது சிம்பனி இசை அமைப்பதற்காக ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகருக்குச் சென்றுள்ளார் இளையராஜா. அங்கே தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து புதாபெஸ்ட் நகரின் எழில்மிகு தோற்றத்தை கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இளையராஜா. அந்தப் படங்களின் தொகுப்பு இதோ…